நீச்சல் பயிற்சியில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்


நீச்சல் பயிற்சியில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்
x

புதுக்கோட்டையில் கோடை விடுமுறையில் நீச்சல் பயிற்சியில் சிறுவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை,

கோடை விடுமுறை

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நிறைவடைந்து கோடை விடுமுறை கடந்த 13-ந் தேதி முதல் தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட மாணவ-மாணவிகள் கோடைவிடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கோவில் திருவிழாக்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்று வருகின்றனர். மேலும் சிலர் தற்காப்பு கலைகளான சிலம்பு, கராத்தே போன்ற பயிற்சி வகுப்புக்கும், செஸ், டென்னிஸ், இறகுபந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் பயிற்சி பெறுகின்றனர். இவற்றையெல்லாம் விட நீச்சல் பயிற்சிக்கு சிறுவர், சிறுமிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நீச்சல் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 6 வயது முதலானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் தற்போது கோடைவிடுமுறையில் ஏராளமானோர் சேர்ந்துள்ளனர். கோடை வெயிலுக்கு இதமாகவும் இந்த பயிற்சி குழந்தைகளுக்கு அமைந்துள்ளது.

காலை 7 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும், பெண்களுக்கு தனியாக காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை நீச்சல் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி குறிப்பிட்ட நாட்களுக்கு நடைபெறுகிறது.


Next Story