மூளைச்சாவு அடைந்த ரெயில்வே ஊழியர் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த ரெயில்வே ஊழியர் உடல் உறுப்புகள் தானம்
x

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் கீழே விழுந்த ரெயில்வே ஊழியர் தலையில் அடிபட்டு மூளை சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் கீழே விழுந்த ரெயில்வே ஊழியர் தலையில் அடிபட்டு மூளை சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ரெயில்வே ஊழியர்

திருப்பத்தூா் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ராமரெட்டியூர் கோபால் ரெட்டி தெருவை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகன் பிரபாகரன் (வயது 31). இவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி பவிதாராணி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் பிரபாகரன் கடந்த 20-ந் தேதி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இரவு 7.15 மணியளவில் பணியில் இருந்தார். அப்போது கோவையில் இருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்று புறப்பட்டது. அப்போது பிரபாகரன் திடீரென கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கு பணியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜோலார்பேட்டை ரெயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் உறுப்புகள் தானம்

பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரபாகரன் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மூளைச்சாவு அடைந்த பிரபாகரன் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண் உள்ளிட்ட உறுப்புகள் பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story