கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு


கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு
x

கார் கண்ணாடியை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச்சென்றார்.

திருச்சி

மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன்(வயது 35). இவர் சம்பவத்தன்று கோட்டை ரெயில் நிலைய சாலை பகுதியில் தனது காரை நிறுத்தியிருந்தார். கடைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, காருக்குள் இருந்த ரூ.1,000 மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story