கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

நாட்டறம்பள்ளியில் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. மர்ம நபர்கள் இந்த கோவில் பூட்டை உடைத்து கருவறையில் உள்ள உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

வழக்கம்போல் பூசாரி, முத்துமாரியம்மன் கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியல் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story