கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

நெல்லை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்து கீழ தென்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 52). இவர் தென்கலத்தில் உள்ள மாடசாமி கோவிலில் பூஜை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் தாழையூத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர் ஒருவர் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story