அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்!


அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்!
x

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை கீழஅண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் நேற்று தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

இந்த நிலையில், மதுரையை தொடர்ந்து சென்னை உள்ளிட 37 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story