Normal
சாயல்குடி அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு - போலீசார் விசாரணை
சாயல்குடி அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.
ராமநாதபுரம்
ராமேஸ்வரம் மாவட்டம்,சாயல்குடி அருகே கட்டாலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.இவரது மகன் முனீஸ்வரன் (38). இவர் சாயல்குடி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை வைத்துள்ளார்.
வழக்கம்போல் நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். இன்று காலை கடையை திறக்க வந்தவர் கடை திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து அவர் சாயல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து முனீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Related Tags :
Next Story