வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 3 Oct 2022 6:45 PM GMT (Updated: 3 Oct 2022 6:46 PM GMT)

நெய்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

கடலூர்

நெய்வேலி:

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து தில்லை நகர் கங்கை நதி தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி சுமித்திரை(வயது 62). இவர், தனது மகனை பார்க்க சென்னைக்கு சென்று விட்டார். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 2 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story