கார் மோதி கொத்தனார் பலி


கார் மோதி கொத்தனார் பலி
x

ராமநத்தம் அருகே கார் மோதி கொத்தனார் உயிரிழந்தார்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த மா. புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45), கொத்தனார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மா.புடையூர் கைகாட்டி அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று, ராஜ்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாாின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story