கார் மோதி கொத்தனார் பலி

ஆண்டிப்பட்டி அருகே கார் மோதி கொத்தனார் பலியானார்.
தேனி
ஆண்டிப்பட்டி நகரில் கொண்டமநாயக்கன்பட்டி பகவதி கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா. நண்பர்களான இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வருகின்றனர். இதனால் 2 பேரும் ஒன்றாக செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இருவரும் பகவதி அம்மன் கோவில் எதிரே தேனி-மதுரை சாலையை கடந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார், கண்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை ராஜா மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் காரை ஓட்டி வந்த அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த கலைவாணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






