வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


ஜோலார்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்துப நகை, பணத்தை திருடிய மர்ம நபர்கள், காய வைத்திருந்த நைட்டிகளையும் அள்ளிச்சென்றனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்துப நகை, பணத்தை திருடிய மர்ம நபர்கள், காய வைத்திருந்த நைட்டிகளையும் அள்ளிச்சென்றனர்.

நகை, பணம் திருட்டு

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் மூலை வீட்டு வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு, எலக்ட்ரீசியன். இவரது மனைவி மணிமேகலை (வயது 33). இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். பின்னர் இரவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. பீரோவும் திறந்திருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீரோவில் சோதனை செய்ததில் பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரொக்கம் உள்ளிட்டவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மணிமேகலை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டில் கைரேகைகளை பதிவு செய்தனர்.

நைட்டி, நாட்டுக்கோழி

மேலும் மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெளியே காய வைத்திருந்த நைட்டியையும் விட்டு வைக்காமல் அதையும் திருடிச் சென்றுள்ளனர். மேலும் சில வீடுகளில் 3 நாட்டு கோழிகளையும், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டியூப்பை அறுத்து அதிலிருந்து பெட்ரோலை திருடி தங்களது வாகனத்திற்கு போட்டு சென்றுள்ளனர்.


Next Story