வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அழகப்பா லே அவுட்டை சேர்ந்தவர் நடராஜன்(வயது 55). டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலையாக குடும்பத்துடன் அரவக்குறிச்சி சென்று இருந்தார்.
இந்தநிலையில் நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு மடிக்கணினி திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





