நர்சு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


நர்சு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

வெறையூர் அருகே நர்சு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வெறையூர் அருகே நர்சு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

வெறையூர் அருகே உள்ள சு.வாளவெட்டியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 48). இவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராணி, சென்னையில் நர்சாக வேலை செய்கிறார். இதனால் சு.வாளவெட்டியில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து கண்டாச்சிபுரத்தில் இருக்கும் ராஜகோபாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த கம்மல், மோதிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வெறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story