குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 5 July 2023 8:30 PM GMT (Updated: 5 July 2023 8:30 PM GMT)

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து ஆழியாற்றில் திறக்கப்படும் தண்ணீரை அம்பராம்பாளையம் பகுதியில் நீரேற்றம் செய்து சுத்திகரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றனர். இதற்காக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு ஆழியாற்றில் இருந்துதான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே போடிபாளையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. அந்த குடிநீர் சாலைகளில் தேங்குவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




Next Story