உத்தமபாளையம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

உத்தமபாளையம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் மேற்குத்தெருவை சேர்ந்த பெரியகாளை மகன் ஜெயராம் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது முற்றத்தில் வேட்டியால் தூக்கு போட்டார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஜெயராமை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராம் உயிரிழந்தார்.
இந்த தற்கொலை குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





