ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு சலங்கை மாடு ஆட்டம் நடைபெற்றது.


ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு சலங்கை மாடு ஆட்டம் நடைபெற்றது.
x

ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு சலங்கை மாடு ஆட்டம் நடைபெற்றது.

திருப்பூர்

குடிமங்கலம்

ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு சலங்கை மாடு ஆட்டம் நடைபெற்றது.

சலங்கை மாடுகள்

உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் உருமி இசைக்கேற்ப ஆடும்வகையில் மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கைமாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை.

கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது. மாட்டுப்பொங்கலன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகள் ஆல்கொண்டமால் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உருமி இசைக்கேற்ப ஆடுகின்றன.அதைத் தொடர்ந்து சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்து வழிபடுகின்றனர்.

தேவராட்டம்

மார்கழி மாதத்தில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊருக்கு நடுவில் ஒன்று கூடுகின்றனர். உருமி இசைக்கு ஏற்ப காலில் சலங்கைகள் கட்டிக்கொண்டு தேவராட்டம் ஆடுகின்றனர்.தேவராட்டம் தொடங்கும் போது மெதுவாக ஆரம்பித்து அதிவேகமாக உச்ச நிலையை அடைந்த பின்னர் மெதுவாக முடிகிறது.

ஆல்கொண்டமால் கோவில் தமிழர் திருநாள் திருவிழாவின் போது கிராமப்புறங்களில் உள்ள சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரைகோவிலில் தேவராட்டம் ஆடுகின்றனர். நேற்று தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கோவில் வளாகத்தை சுற்றிலும் தேவராட்டம் சலங்கை மாடு ஆட்டம் ஆடினர். இதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

1 More update

Related Tags :
Next Story