மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம்


மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம்
x

மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மதுரை

மேலூர்

மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம் முசுண்டகிரிப்பட்டி சாலையில் இருந்து ஆமூர் விலக்கு வரை நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 13 வண்டிகள் கலந்துகொண்டன. முதல் பரிசை மேலூர் தெற்குப்பட்டி பிரேம் பிரதர்ஸ் நல்லாங்குடி, 2-ம் பரிசை மேலூர் ஆட்டுக்குளம் அழகர்மலையான் நகுல்நிலா, 3-ம் பரிசை தஞ்சை நீலகண்ட பிள்ளையார் லிங்கேஷ் ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன. சின்னமாட்டு வண்டி என மொத்தம் 38 வண்டிகள் 2 சுற்றாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டியில் முதல்பரிசை சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டை ராமையா கோனார், 2-ம் பரிசை கொடிமங்கலம் திருப்பதி அம்பலம், 3-ம் பரிசை சிங்கம்புணரி பிரபாகரன், 2-வது சுற்று போட்டியில் முதல் பரிசை ஆட்டுக்குளம் அழகர்மலையான், நகுல்நிலா 2-ம் பரிசை கள்ளந்திரி ஐந்துகோவில் சுவாமி துணை அஸ்வந்த், 3-ம் பரிசை கிடாரிப்பட்டி சின்னையா சுவாமி துணை ஆகியோரது மாடுகள் வெற்றிபெற்றன. வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகையும், வெற்றி கோப்பையும் வழங்கினர். மாட்டுவண்டி பந்தயத்தை ரோட்டின் இருபுறமும் பந்தய ரசிகர்கள் ஆராவாரம் செய்து மகிழ்ந்தனர்.


Next Story