தேர்த்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


தேர்த்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 22 July 2023 6:45 PM GMT (Updated: 23 July 2023 10:37 AM GMT)

திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி வயிரவநாத சுவாமி கோவில் தேர் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி வயிரவநாத சுவாமி கோவில் தேர் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வயிரவன்பட்டி-கும்மங்குடி வழியாக தென்கரை சாலையில் நடைபெற்றது. மொத்தம் 91 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பேராவூரணி கழனிவாசல் லிங்கேஸ்வரன் வண்டியும், 2-வது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் மற்றும் பொய்யாதநல்லூர் கபீப்முகமது வண்டியும், 3-வது பரிசை புதுப்பட்டி அம்பாள் வண்டியும் பெற்றது.

நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 28 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கோட்டையூர் சுதன் வண்டியும், 2-வது பரிசை பொன்குண்டுப்பட்டி செல்லையா மற்றும் பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும், 3-வது பரிசை புதுப்பட்டி அம்பாள் வண்டியும் பெற்றது. சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 52 வண்டிகள் கலந்துகொண்டு 2 பிரிவாக நடைபெற்றது.

முதல் பிரிவில் முதல் பரிசை கரியபட்டி வீரப்பன் வண்டியும், 2-வது பரிசை நெய்வாசல் பெரியசாமி வண்டியும், 3-வது பரிசை சொக்கலிங்கம்புதூர் ராமகோனார் வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் வண்டியும், 2-வது பரிசை வடகுடி நெல்லியாண்டவர் வண்டியும், 3-வது பரிசை சாத்தம்பத்தி மோகன் மற்றும் ஈளக்குடிப்பட்டி சங்கப்பத்தேவர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story