பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 11:28 AM GMT)

காரைக்குடியில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி கழனிவாசல் இரட்டைக்குளத்து முனீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கழனிவாசல்-சூரக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 35 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக பந்தயம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டன.

அதில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை சாக்கோட்டை கோதையம்மாள் மரமில் வண்டியும், 3-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் மற்றும் திருச்சி மாவட்டம் கிளியூர் அசோக் வண்டியும், 4-வது பரிசை தேவதானப்பட்டி செந்தில் மற்றும் புரண்டி புதுக்குடி ராஜசேகர் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 27 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை ஆலத்துப்பட்டி முனீஸ்வரர் வண்டியும், 3-வது மற்றும் 4-வது பரிசை கழனிவாசல் செல்வம் மற்றும் மகிழ்மித்திரன்சுந்தர் ஆகியோர் வண்டியும், 5-வது பரிசை மார்க்கயன்கோட்டை ஜெகதீஸ் மற்றும் சின்னமனூர் சிவக்குமார் வண்டியும், 6-வது பரிசை பாகனேரி ராமநாதன் வண்டியும் பெற்றது. இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.


Next Story