முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 26 Aug 2023 6:45 PM GMT (Updated: 26 Aug 2023 6:46 PM GMT)

காளையார்கோவில் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

முளைப்பாரி திருவிழா

காளையார்கோவிலில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் காளையார்கோவில்-தொண்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 32 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக போட்டி நடைபெற்றது.

அதன்படி முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டன. இந்த போட்டியில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டியும், 2-வது பரிசை நாட்டரசன்கோட்டை கண்மணிபாண்டியன் வண்டியும், 3-வது பரிசை துரும்புபட்டி மாதவன் வண்டியும், 4-வது பரிசை நெற்புகப்பட்டி ரிதன்யாசதீஸ்குமார் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

இதை தொடர்ந்து நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2-வது பரிசை தேனி மாவட்டம் கோம்பை பொன்னுச்சாமி வண்டியும், 3-வது பரிசை சொக்கநாதபுரம் பாலு வண்டியும், 4-வது பரிசை சாத்தம்பத்தி சரவணன் வண்டியும், 5-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 6-வது பரிசை குளக்கட்டபட்டி மீராராவுத்தர் வண்டியும் பெற்றது.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்தனர்.


Next Story