முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 28 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 11:36 AM GMT)

காரைக்குடி அருகே கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே இளங்குடி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் இளங்குடி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் மொத்தம் 17 வண்டிகள் கலந்துகொண்டன. போட்டி பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டன.

இந்த போட்டியில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் ஆசிரியர் விஜயவேல் மற்றும் திருவாதவூர் தன்வந்த்பிரசாத் வண்டியும், 3-வது பரிசை கோட்டணத்தாம்பட்டி பாலு மற்றும் கயத்தார் காந்திராஜன் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டன. இந்த போட்டியில் முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும், 2-வது பரிசை தேவகோட்டை லெட்சுமணன் மற்றும் இளங்குடி அருண் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை திருவாதவூர் கார்த்திகேயன் வண்டியும் பெற்றது.

இதை தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.


Next Story