புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 3 Oct 2023 7:00 PM GMT (Updated: 3 Oct 2023 7:00 PM GMT)

சிவகங்கை அருகே திருவேட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் திருவேட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் காஞ்சிரங்கால்-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 38 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை சிவகங்கை அருண் ஸ்டியோ மற்றும் வள்ளியூர் ஆனந்த் வண்டியும், 2-வது பரிசை அவனியாபுரம் பசும்பொன் வண்டியும், 3-வது பரிசை குமாரப்பட்டி விஷால்கண்ணன் வண்டியும், 4-வது பரிசை காரைக்குடி ரிதன்யாஸ்ரீ வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 28 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது.

பரிசுகள்

முதல் பிரிவில் முதல் பரிசை மறவர்கரிசல்குளம் ஊராட்சி தலைவர் பாண்டித்துரை வண்டியும், 2-வது பரிசை பாகனேரி தொழிலதிபர் புகழேந்தி வண்டியும், 3-வது பரிசை துரைச்சாமிபுரம் ஐயங்கார் பேக்கரி மற்றும் சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் ஆகியோர் வண்டியும், 4-வது பரிசை கிடாக்குளம் சேதுகோடாங்கி வண்டியும் பெற்றது.

2-வது பிரிவில் முதல் பரிசை கோவிலாங்குளம் காளீஸ்வரன் வண்டியும், 2-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி மற்றும் காரைக்குடி கருப்பணன் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை தனியாமங்கலம் கருப்பையா மற்றும் தேத்தாம்பட்டி மகேஷ் ஆகியோர் வண்டியும், 4-வது பரிசை சூரக்குண்டு தர்மேந்திரன் மற்றும் நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வர்கீஸ் ஆனந்த் ஆகியோர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story