கல்லல் அருகே மாட்டு வண்டி பந்தயம்


கல்லல் அருகே  மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்லல் ஒன்றியத்திற்குட்ட பனங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

கல்லல் ஒன்றியத்திற்குட்ட பனங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட பனங்குடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பனங்குடி-கண்டிப்பட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் பசும்பொன் வண்டியும், 2-வது பரிசை நகரம்பட்டி கண்ணதாசன் வண்டியும், 3-வது பரிசை துருவம்பட்டி கே.ஆர்.மாதவன் வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயம்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது.

முதல் பிரிவில் முதல் பரிசை அரும்பனூர் ரமேஷ் வண்டியும், 2-வது பரிசை சிங்கினிப்பட்டி பெரியசாமி வண்டியும், 3-வது பரிசை புதுப்பட்டி ஆதிக்ராஜா வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை குமாரப்பட்டி ஜெயராஜ் வண்டியும், 2-வது பரிசை புதுப்பட்டி கோமாலியம்மன் வண்டியும், 3-வது பரிசை துரும்புபட்டி சாதனா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

1 More update

Next Story