விவசாயி வீட்டில் திருட்டு


விவசாயி வீட்டில் திருட்டு
x

தண்டராம்பட்டு அருகே விவசாயி வீட்டில் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள செ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65) விவசாயி. இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூருக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு வந்து போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தேவராஜ் தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story