மொபட் மீது பஸ் மோதல்; முதியவர் பலி


மொபட் மீது பஸ் மோதல்; முதியவர் பலி
x

பழனி அருகே மொபட் மீது பஸ் மோதியதில் முதியவர் பலியானார்.

திண்டுக்கல்

பழனியை அடுத்த மானூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவர் தனது உறவினர் சுப்பிரமணியுடன் மொபட்டில் பழனி சென்றுவிட்டு மானூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். மொபட்டை சுப்பிரமணியன் ஓட்டினார். மானூர் ஆற்றுப்பாலம் பகுதியில் வந்தபோது, திருப்பூரில் இருந்து பழனி நோக்கி வந்த தனியார் பஸ், மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் சுப்பிரமணியன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுப்பிரமணி காயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த கீரனூர் போலீசார் காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story