ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றிலும் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் '5 ஆண்டுகளாக வடமதுரையில் நிரந்தர சார்-பதிவாளரை நியமிக்காதது ஏன்?, மாவட்ட பதிவாளருக்கு தக்க சன்மானம் கொடுப்பவர்களே தற்காலிக சார்பதிவாளராக நியமிக்கப்படுவது ஏன்? மேனுவல் வில்லங்கங்கள் வருடக்கணக்கில் தயார் செய்யாமல் இருப்பது ஏன்? நூற்றுக்கணக்கான இன்டெக்ஸ் கரெக்சன்களை சரி செய்யாமல் இருப்பது ஏன்?' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
---
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





