கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு


கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:45 PM GMT)

நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவர் கொலை

நெல்லை அருகே உள்ள மேலசெவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஆட்டோவை வழிமறித்து விஜயகுமாரை வெட்டிக் கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனிப்படை அமைப்பு

இதற்கிடையே குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், இன்னோஸ்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்யும் வரை விஜயகுமாரின் உடலை வாங்க வாங்க மாட்டோம் என்று தெரிவித்து அவரது உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட விஜயகுமாரின் ஊரில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story