கோவில்பட்டியில் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டுஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டுஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட் பயிலும் பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்து ஆசிரியர்களை அவமதிக்கும் போக்கினை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டார தலைவர் லியோ பிரின்ஸ் சாம் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் காந்தி ராஜ் ஆகியோர் பேசினர். வட்டார பொருளாளர் ஆத்தியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story