தர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்96 மனுக்கள் மீது உடனடி தீர்வு


தர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்96 மனுக்கள் மீது உடனடி தீர்வு
x
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 96 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 103 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

உடனடி தீர்வு

இந்த முகாமில் 96 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 7 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் பெரும்பாலான மனுக்கள் குடும்ப பிரச்சினை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான புகார் மனுக்களை அதிகம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story