கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை


கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை
x

கல்லூரி மாணவி கடத்தலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் இடங்கண்ணி மேலத்தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டியன் (வயது 54), கூலி தொழிலாளி. இவரது மகள் செந்தமிழ்செல்வி (18). இவர் ஜெயங்கொண்டம் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் செவிலியர் பட்டய படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி மாலை வெளியே சென்று வருவதாக கூறி ெசன்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ்செல்வியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story