இரு கைகளில் எழுதலாம்


இரு கைகளில் எழுதலாம்
x

ஒரு மனிதன் வழக்கமாக ஒரு நிமிடத்தில் 20 வார்த்தைகளை எழுத முடியும். ஆனால், ஒரு பெண் தனது இரண்டு கைகளால் ஒரு நிமிடத்தில் 50 வார்த்தைகளை எழுத முடியும் என நிரூபித்துள்ளார். மேலும், ஒரே நேரத்தில் அவர் ஒரு கையால் மேலிருந்து கீழும், இன்னொரு கையால் இடமிருந்து வலமும் எழுதி அசத்துகிறார்.

கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னட மாவட்டம் ஆதித்யா தாலுகாவைச் சேர்ந்த ஆதி என்ற 15 வயது சிறுமி தனது இரண்டு கைகளால் 40 வார்த்தைகளை வெறும் ஒரு நிமிடத்தில் எழுதினார். மேலும் அவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லதா அறக்கட்டளையின் மூலம் உலக சாதனையைப் பதிவு செய்தார்.

கின்னஸ் உலக சாதனை படைக்கும் விருப்பத்துடன், ஆதி இப்போது நிமிடத்திற்கு 50 வார்த்தைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வகையில் எழுதிவரும் ஆதி, இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் 10 வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த 10 வகைகள்: யுனி இயக்கம், இடது கை வேகம், வலது கை வேகம், தலைகீழ் இயக்கம், மிரர் படம், ஹெட்டெரோ தலைப்பு, ஹெட்டெரோ மொழியியல், பரிமாற்றம், நடனம் மற்றும் மடிப்பு.

"நீங்கள் ஒரு வேலையில் சாதிக்க வேண்டும் என்றால் முயற்சியையும், பயிற்சியையும் நிறுத்த வேண்டாம்'' என்று சொல்கிறார் ஆதி. முறையான கல்வி பெறாத ஆதி, உருவவியல் மையத்தில் பயிற்சி பெற்றார். இங்கு ஒரு சிறப்புக் கல்வி முறை உள்ளது. அங்கு கட்டாயக் கற்றலை அனுமதிக்காமல் சுய ஆய்வு கல்வி நடத்தப்படுகிறது.

"ஆதி ஒன்றரை வயதாக இருந்தபோதே புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தாள். இரண்டரை ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 பக்கங்களை எழுதிக்கொண்டிருந்தாள்'' என்று அவரின் தந்தை கோபட்கர் கூறுகிறார்.


Next Story