கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

தஞ்சையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்;
தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை மானம்புச்சாவடி பகுதியை சேர்ந்த அபிஷேக் (வயது 19) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





