குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது


குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
x

குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை காமராஜர் நகரை சேர்ந்தவர் தாஸ் என்ற மரியசூசை(வயது 50). பிரபல கஞ்சா வியாபாரி. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி அவரது வீட்டு கோழிக்கூண்டில் பதுக்கிய 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மரியசூசை கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிந்துரையின்பேரில் கலெக்டர் சமீரன் உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் இருக்கும் மரியசூசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு நகல் அவரிடம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story