மொபட் மீது கார் மோதி கணவன்-மனைவி பலி


மொபட் மீது கார் மோதி கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 23 Feb 2023 8:40 PM GMT (Updated: 24 Feb 2023 10:23 AM GMT)

மொபட் மீது கார் மோதி கணவன்-மனைவி உயிரிழந்தனர்.

திருச்சி

துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள அழக கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(வயது 45). விவசாயி. இவரது மனைவி போதும்பொண்ணு(38). இவர்கள் 2 பேரும் ஒரு மொபட்டில் ெசன்று வெள்ள பிச்சம்பட்டியில் நடந்த காதணி விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் மீண்டும் அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வளநாட்டை அடுத்த சொரியம்பட்டி பிரிவு அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story