மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்; ஒருவர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்; ஒருவர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

திருச்சி

உப்பிலியபுரம்:

விருந்தினர்

உப்பிலியபுரம் அருகே உள்ள பழைய மங்கப்பட்டியைச் சேர்ந்தவர் வரதன்(வயது 30). இவர் தனது வீட்டிற்கு விருந்தினராக வந்த அரியலூர் மாவட்டம் குமுளூரைச் சேர்ந்த துரைராஜுடன்(57) ஒரு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டில் இருந்து தம்மம்பட்டி -துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட துரைராஜ், மூளை சிதறி பரிதாபமாக இறந்தார். வரதன் படுகாயமடைந்தார்.

மேலும் அந்த கார் தாறுமாறாக ஓடி எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த முருங்கப்பட்டியை சேர்ந்த செந்தில்(43) படுகாயமடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஸ்டின் சந்தியாகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் துரைராஜின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரை ஓட்டி வந்த சேலம் கிட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாலாஜி(வயது 52) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story