மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

கரூர்

தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக முருகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகன் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து முருகனின் மகன் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story