மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தனியார் வங்கி ஊழியர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தனியார் வங்கி ஊழியர் சாவு
x

திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் வங்கி ஊழியர் இறந்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவருடைய மகன் சுதன்ராஜ். அதே ஊரைச் சேர்ந்தவர் கவல முத்து மகன் விஷ்ணு (வயது 23). தனியார் வங்கி ஊழியர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் மன்னார்புரம்- வள்ளியூர் ரோட்டில் உள்ள தனியார் கல்குவாரி அருகே சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஷ்ணு ஓட்டி சென்றார். அப்போது எதிரில் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த சுதன்ராஜ் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். விஷ்ணுவிற்கு கால் முறிந்தது. சம்பவம் குறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கும்பி குளத்தை சேர்ந்த சங்கர் (34) என்பவரை தேடி வருகிறார். விபத்தில் மரணம் அடைந்த சுதன்ராஜ், விஷ்ணுவின் உடன்பிறந்த அக்காளை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்

1 More update

Next Story