செஞ்சி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம்


செஞ்சி அருகே  தடுப்பு சுவரில் கார் மோதி வாலிபர் பலி  2 பேர் படுகாயம்
x

செஞ்சி அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம்

செஞ்சி,

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் ராவ். இவரது மகன்கள் விக்ரம்(வயது 34), பிரசாந்த்குமார்(37). இவர்கள் புதுவை கடற்கரையில் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். இருவரும் நேற்று முன்தினம் காரில் பெங்களூரு சென்று விட்டு இரவு புதுவைக்கு புறப்பட்டனர். காரை புதுவையை சேர்ந்த வரதராஜன் மகன் ராஜேந்திரன்(47) என்பவர் ஓட்டினார். அதிகாலை 2.30 மணி அளவில் அவர்கள் செஞ்சி அருகே வல்லம் தொண்டி ஆற்று பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புசுவரில் மோதியது. இதில் விக்ரம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பிரசாந்த்குமார், கஜேந்திரன் ஆகியோர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story