வேன் மீது கார் மோதல்; வாலிபர் காயம்


வேன் மீது கார் மோதல்; வாலிபர் காயம்
x

வேன் மீது கார் மோதியதில் வாலிபர் காயமடைந்தார்.

பெரம்பலூர்

மங்களமேடு:

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, திம்மயம்பட்டியை சேர்ந்தவர் மகேஷ்குமார்(வயது 24). இவர் நேற்று காலை சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி ஒரு காரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள தம்பை பகுதியில் அந்த கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த வேன் மீது திடீரென மோதியது. இதில் காரின் முன்பகுதி வேனின் பின்புற சக்கரம் உள்ள பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மகேஷ்குமார் காயமடைந்தார். அவரை போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story