மொபட் மீது கார் மோதல்; விவசாயி பலி

மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் குமார்(வயது 50). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் தேசிங்கு(40) என்பவருடன் ஒரு மொபட்டில் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மேல்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று இவர்கள் வந்த மொபட் மீது மோதியது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த தேசிங்கு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





