மொபட் மீது கார் மோதல்; 2 பேர் பலி


மொபட் மீது கார் மோதல்; 2 பேர் பலி
x

மொபட் மீது கார் மோதல்; 2 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி

துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்தவர் சாதிக் அலி(வயது 52). இவரது நண்பர் மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த முகமது அலி(47). வியாபாரி. இவர்கள் 2 பேரும் நேற்று ஒரு மொபட்டில் துவரங்குறிச்சி பிரிவு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் சென்ற சாதிக்அலி, முகமது அலி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story