மரத்தில் கார் மோதி 4 பேர் படுகாயம்


மரத்தில் கார் மோதி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Oct 2023 12:00 AM GMT (Updated: 18 Oct 2023 6:07 PM GMT)

போடி அருகே மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

தேனி

போடி முனிசிபல் காலனியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் தினேஷ். இவருக்கு போடியில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக விருதுநகரில் இருந்து அவருடைய உறவினர்கள் முருகேசன், பரமேஸ்வரன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள், தினேஷின் நண்பர்கள் பிரபாகரன், சூர்யா ஆகியோருடன் சேர்ந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஒரு காரில் குரங்கணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது குரங்கணிக்கு செல்லும் முடிவை திடீரென்று மாற்றினர். இதனால் அவர்கள் போடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது போடி - முந்தல் சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் முருகேசன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story