காவிரி ஆற்றில் மூழ்கிகார் டிரைவர் சாவு


காவிரி ஆற்றில் மூழ்கிகார் டிரைவர் சாவு
x

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

பென்னாகரம்

கார் டிரைவர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஐடிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி. அவருடைய மகன் நித்தின் (வயது 23). கார் டிரைவர். நேற்று நித்தின் தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் காரில் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளனர்.

ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த இவர்கள் பின்னர் நாகர் கோவில் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது நித்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்றில் மூழ்கினார். அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர், தண்ணீரில் மூழ்கி பலியானார்.

போலீஸ் விசாரணை

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கிய நித்தின் உடலை மீட்டனர். இதை பார்த்த நண்பர்கள் கதறி துடித்தனர்.

உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story