கார் டிரைவர் தற்கொலை


கார் டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூரை ேசர்ந்தவர் வெள்ளைச்சாமி(வயது 47). கார் டிரைவர். இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவி சீனியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். இதை மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் ஊரின் அருகே உள்ள கண்மாய் கரையில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வெள்ளைச்சாமிக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்

1 More update

Next Story