திருத்தணி முருகன் மலைக்கோவில் பாதையில் கார்- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்


திருத்தணி முருகன் மலைக்கோவில் பாதையில் கார்- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்
x

திருத்தணி முருகன் மலைக்கோவில் பாதையில் கார்- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

திருவள்ளூர்

மீண்டும் நடிக்க வந்த கவுதமிபாண்டிச்சேரி, மகாத்மா காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 56). இவர் நேற்று தனது காரில் குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய திருத்தணிக்கு வந்தார். பின்னர் மலைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபருக்கு கால், தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் படுகாயம் அடைந்த நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் படுகாயமடைந்த நபர் மேல் திருத்தணி பகுதியில் வசிக்கும் ஸ்டாலின் என்பதும், இவர் மலைக்கோவிலில் பழ வியாபாரம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story