வள்ளியூரில் காருக்கு தீவைப்பு


வள்ளியூரில் காருக்கு தீவைப்பு
x

வள்ளியூரில் காருக்கு தீவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் தேவர் வடக்கு தெருவை சேர்ந்த ராமையா மகன் கணேசன் (வயது 43). இவர் தனது வீட்டிற்கு வெளியே தனக்கு சொந்தமான காரை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு முன்பு காரை நிறுத்திவிட்டு தூங்கி விட்டார்.

நேற்று அதிகாலையில் மர்மநபர்கள் காருக்கு தீவைத்து சென்றதாக கூறப்படுகிறது. கார் தீயில் எரிவதை பார்த்த கணேசன் உடனே வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story