கார்-டிராக்டரை வாடகைக்கு எடுத்து மோசடி


கார்-டிராக்டரை வாடகைக்கு எடுத்து மோசடி
x

மானூர் அருகே கார்-டிராக்டரை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே களக்குடியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மகாராஜன் (வயது 39). இவருக்கு சொந்தமான டிராக்டருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வாடகை தருவதாக கூறி, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த குருநாத பாண்டியன் மகன் மாருதி கார்த்திகேயன் வாங்கி சென்றார். பின்னர் அவர் சில மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

இதேபோன்று மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் அஜித்துக்கு (24) சொந்தமான காரையும் மாருதி கார்த்திகேயன் மாத வாடகைக்கு எடுத்து விட்டு பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்த புகார்களின்பேரில், மாருதி கார்த்திகேயன் மீது மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story