டாஸ்மாக் கடை அருகே பிணமாக கிடந்த தச்சுத்தொழிலாளி


டாஸ்மாக் கடை அருகே பிணமாக கிடந்த தச்சுத்தொழிலாளி
x

டாஸ்மாக் கடை அருகே தச்சுத்தொழிலாளி பிணமாக கிடந்தார்.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், கா.அம்பாபூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தவேல்(வயது 38). தச்சுத்தொழிலாளியான இவர் கடந்த 23-ந் தேதி இரவு தேளூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று வருவதாக அவரது மனைவி ராஜேஸ்வரிடம் கூறி சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் கா.அம்பாபூரை சேர்ந்த விஜயகாந்த் என்பவர் டாஸ்மாக் கடை அருகே ஆனந்தவேல் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது பற்றி அருகில் உள்ள கயர்லாபாத் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆனந்தவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துபோன ஆனந்தவேலுக்கு 7 வயதில் கிஷோர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story