சிறுமிக்கு பாலியல் தொல்லை:முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு

தர்மபுரி;
நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, (வயது 60). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்ற சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுபற்றி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்ட பிரிவின் கீழ் கோவிந்தசாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





