இருதரப்பினர் மோதல்: 8 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்: 8 பேர் மீது வழக்கு
x

போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

பெங்களூருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 59). போச்சம்பள்ளி அருகே உள்ள விளங்காமுடியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (55) உறவினர்கள். இவர்களுக்கு விளங்காமுடி பகுதியில் நிலம் உள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மோதி கொண்டனர். இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் முருகேசன், ராஜேஸ்வரி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story